நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறுமா ?

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எதிர்­வரும் புதன்­கி­ழமை 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணையை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கைய­ளித்­தி­ருந்­தது. இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த 34 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.
நிதியமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு அப்பால் மற்­று­மொரு மினி வரவு --செல­வுத்­திட்­டத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைக்­கொண்டு சமர்ப்­பிக்­கச் ­செய்­தமை மேலும் பெறு­மதி சேர் வரியை அதி­க­ரித்­தது போன்ற விட­யங்­க­ளுக்­காக இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணையை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் முன்­வைத்­துள்­ளனர்.
நல்­லாட்சி அரசின் அமைச்­ச­ரொ­ரு­வ­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும். முத­லா­வது நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை இது­வென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­வுக்கு எதி­ரா­கவே முதல் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­தனர். ஆனால் கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் அப்­பி­ரே­ர­ணையை விவா­தத்­துக்கு எடுக்­கும்­படி அவர்கள் கோரிக்கை விடுக்­க­வில்லை. அதனால் அந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தோல்­வி­ய­டையும் என்­பது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யின­ருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை மூலம் அர­சாங்­கத்தை விமர்­சிக்க அவர்கள் ஒரு சந்­தர்ப்­பத்தை பெறு­கின்­றனர். அர­சாங்கம் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளது.
நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­­ரேரணை விவா­தத்­துக்கு வரும் எதிர்­வரும் 8 ஆம் திகதி ஆளும் தரப்­பைச்­சேர்ந்த அனைத்து அமைச்­சர்களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்­டா­ய­மாக பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தர­வேண்­டு­மென்றும் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்ள அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாடு திரும்ப வேண்­டு­மென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கண்­டிப்­பான பணிப்­புரை விடுத்­துள்ளார். 8 ஆம் திகதி இந்த நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை மீதான விவாதம் பாரா­ளு­மன்­றத்தில் மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை நடை­பெறும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மே தினத்தின் போது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரால் ஏற்­பாடு செய்­தி­ருந்த கிரு­லப்­பனை கூட்டம் பிசு­பி­சுத்துப் போன­தை­ய­டுத்து ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் சோர்­வ­டைந்து போயி­ருந்­தனர். அந்த சோர்­வைப்­போக்கி மீண்டும் கட்­சி­யினருக்கு உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்த இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை உத­வு­மென ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் நம்­பு­கின்­றனர்.
சச்­சின்வாஸ் --- மஹிந்த ரக­சிய சந்­திப்பு
பல்­வேறு மோச­டிக்­குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட மஹிந்த ராஜ­ப­க் ஷவின் நெருங்­கிய உற­வான சச்­சின்வாஸ் குண­வர்­தன திடீ­ரென மைத்­திரி தரப்­புக்கு தாவினார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பலப்­பிட்­டிய தொகுதி அமைப்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்டார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் போது இடம்­பெற்ற ஊழல்கள் மோச­டி­களை அவர் வெளிச்­சத்­துக்கு கொண்டு வருவார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. இருந்தும் சச்­சின்வாஸ் குண­வர்­த­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் இடம்­பெற்­றுள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
இந்த சந்­திப்பை யொஹான் ரத்­வத்த ஏற்­பாடு செய்­த­தா­கவும் அவ­ரது வீட்­டி­லேயே இச்­சந்­திப்பு இடம்­பெற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இந்த சந்­திப்பின் பின்­ன­ணியில் ஏதா­வது சூழ்ச்சி இருக்­க­லா­மெ­னவும் சந்­தேகம் எழுப்­பப்­ப­டு­கின்­றது.
கடந்த மஹிந்த ஆட்­சியில் ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு சொந்­த­மான 32 வாக­னங்­களை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்­தி­யது உட்­பட பல குற்­றச்­சாட்­டுக்கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன. இருந்தும் சச்சின் வாஸ் குண­வர்­தன மைத்­திரி தரப்­புக்கு மாறி அரசு தரப்பு சாட்­சி­யாக மாறிய பின்னர் அவர் மீதான விசா­ர­ணைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.
ஊழல் மோச­டியில் ஈடு­பட்டோர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தது குறித்து அதி­ருப்தி
அர­சாங்­கத்­தையும் ஜனா­தி­ப­தி­யையும் பத­விக்கு கொண்டு வரு­வ­தற்கு கோட்டே விகா­ரா­தி­பதி அமரர் மாது­லு­வாவே சோபித தேரர் தலை­மையில் சிவில் சமூக அமைப்­புகள் தொழிற்­சங்­கங்கள் புத்­தி­ஜீ­விகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டன. மஹிந்த ஆட்­சியில் ஊழல் மோசடி அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வது குறித்தும் இதி­லி­ருந்து நாட்டை மீட்­டுக்­கொள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மெ­னவும் அவர்கள் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.
மஹிந்த ஆட்­சியில் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் அப்­போது இவர்கள் மேடை­களில் முழக்­க­மிட்­டனர்.
ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்றார். புதிய அர­சாங்கம் தெரிவு செய்­யப்­பட்­டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரானார். மஹிந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை விசா­ரணை செய்ய ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. பலர் மீது விசா­ரணை நடை­பெற்­றது. விசா­ரணை முடி­வுற்ற பின்னர் 26 கோவைகள் வழக்கு தொட­ரு­வ­தற்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.
ஆனால் இது­வரை ஒரு வழக்­கா­வது தொட­ரப்­ப­ட­வில்லை.
நல்­லாட்­சிக்­கான அமைப்பு இந்த விடயம் குறித்து அதி­ருப்தி தெரி­வித்து வந்­தது. இருந்தும் எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­டா­த­தை­யிட்டு அந்த அமைப்பு அர­சுக்கு எதி­ராக மக்­களைத் திரட்டி போராட்டம் நடத்­தப்­போ­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. ஊழல் மோச­டிகள், அதி­கார துஷ்­பி­ர­யோகம், முறை­கே­டுகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களில் ஈடு­பட்­ட­வர்கள் தொடர்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் அவர்­க­ளைக்­காப்­பாற்றும் முயற்­சியில் ஈடு­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.
ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டு வழக்கை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­களை வழங்கி அழகு பார்ப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.
மஹிந்த ஆட்­சியில் தொலைத் தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ள­ரா­க­வி­ருந்­தவர் அனுஷ பெல்­பிட்ட. பணிப்­பாளர் சபையில் பதவி வழி உறுப்­பி­ன­ராக முன்னாள் ஜனா­தி­ப­தியின் லலித் வீர­துங்க இருந்தார். இந்த இரு­வரும் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­ப­க் ஷவின் வெற்­றிக்­காக தொலை தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் 600 மில்­லியன் ரூபா­வுக்கு இப்­பு­ட­வை­களை கொள்­வ­னவு செய்­தது தொடர்­பான குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. இருந்தும் அனுஷ பெல்­பிட்­ட­வுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் அமைச்­சொன்றில் மேல­திக செய­லாளர் பதவி வழங்­கி­யுள்­ளது. இப்­போது இவ்­வி­டயம் தொடர்­பாக பாரிய சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன.
ஷிராந்­தியின் ஹோட்டல் கட்­டணம் செலுத்­து­வது யார்?
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­பக் ஷ 2014 ஆம் ஆண்டு வெசாக் கொண்­டாட்­டங்­களைக் கண்டு களிப்­ப­தற்­காக பிரான்ஸ் நக­ருக்கு சென்­றி­ருந்தார். அப்­போது இவர் பிரான்­ஸி­லுள்ள ஆடம்­பர ஹோட்­ட­லொன்றில் தங்­கி­யுள்ளார். இந்த ஹோட்­டலில் ஒரு நாள் தங்­கு­வ­தற்கு கட்­ட­ண­மாக 2573746 ரூபா அற­வி­டப்­ப­டு­கின்­றது.
ஷிராந்தி ராஜ­ப­க் ஷவுடன் சென்­ற­வர்­களும் இந்த ஹோட்­டலில் ஜனா­தி­ப­திகள் பயன்­ப­டுத்தும் அள­வி­லான அறை­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
ஷிராந்தி ராஜ­பக் ஷ குழு­வினர் தங்­கிய ஹோட்டல் கட்­ட­ணத்தை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்திலேயே ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினரின் ஹோட்டல் கட்டணங்களை செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாதாரண வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்துள்ளார். இவர் பிரத்தியேக விமானத்தில் செல்லாததன் காரணமாக இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதன் காரணமாக பெருந்தொகைப்பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்,

நன்றி வீரகேசரி

No comments:

Copyright © 2016 Kilinochchi