கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசாதகர் ஒருவர் மூன்று நாள் காச்சலை தொடர்ந்து வைத்தியசாலையலில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தமையடுத்து அரவது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த ராசா றமணி வயது 44 என்பவர் கடந்த 04-06-2016 அன்று திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவே விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் காலையில் மரணமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வைத்தியவர் ஜெயவர்த்தன மற்றும் கிளிநொச்சி மவாட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி க. திருலோகமூர்த்தி ஆகியோர் ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து உடல் யாழ் போதான வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு ஞாயிறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிகப்பட்டு சிகிசையின் பின்னர் ஓரளவு சாதரண நிலைமைக்கு திரும்பிய நிலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த நோயாளி அன்றிரவு இரவு மீண்டும் சுகயீனம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்றும் ஆனால் வைத்தியசாலை அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் இதனாலேயே அவர் இறந்துள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மா.ஜெயராசா அவர்களிடம் கேட்ட போது
வைத்தியசாலையின் பெண் பரிசாதகர் வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிகப்பட்டு மூளைக் காச்சலுக்கான சிகிசை அளிக்கப்பட்டு நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு உடல் யாழ் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.
இதே வேளை வைத்தியசாலையின் கவனயீனமும் காரணமா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உடற் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பான உண்மை நிலைமையை தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர்
பொது மக்கள் ஒரு காச்சல் ஏற்பட்டாலும் வைத்தியசாலைக்கு சென்று பூரண சிகிசையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
Related Pots
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்டத்துக்கு அப்பால் மற்றுமொரு மினி வரவு --செலவுத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக்கொண்டு சமர்ப்பிக்கச் செய்தமை மேலும் பெறுமதி சேர் வரியை அதிகரித்தது போன்ற விடயங்களுக்காக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
நல்லாட்சி அரசின் அமைச்சரொருவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராகவே முதல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர். ஆனால் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அப்பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுக்கவில்லை. அதனால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என்பது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்தை விமர்சிக்க அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை பெறுகின்றனர். அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வரும் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆளும் தரப்பைச்சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயமாக பாராளுமன்றத்துக்கு வருகை தரவேண்டுமென்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்ப வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான பணிப்புரை விடுத்துள்ளார். 8 ஆம் திகதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மே தினத்தின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்திருந்த கிருலப்பனை கூட்டம் பிசுபிசுத்துப் போனதையடுத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சோர்வடைந்து போயிருந்தனர். அந்த சோர்வைப்போக்கி மீண்டும் கட்சியினருக்கு உத்வேகத்தை ஏற்படுத்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உதவுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர்.
சச்சின்வாஸ் --- மஹிந்த ரகசிய சந்திப்பு
பல்வேறு மோசடிக்குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மஹிந்த ராஜபக் ஷவின் நெருங்கிய உறவான சச்சின்வாஸ் குணவர்தன திடீரென மைத்திரி தரப்புக்கு தாவினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் மோசடிகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் சச்சின்வாஸ் குணவர்தனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பை யொஹான் ரத்வத்த ஏற்பாடு செய்ததாகவும் அவரது வீட்டிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் பின்னணியில் ஏதாவது சூழ்ச்சி இருக்கலாமெனவும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
கடந்த மஹிந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 32 வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இருந்தும் சச்சின் வாஸ் குணவர்தன மைத்திரி தரப்புக்கு மாறி அரசு தரப்பு சாட்சியாக மாறிய பின்னர் அவர் மீதான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஊழல் மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அதிருப்தி
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவிக்கு கொண்டு வருவதற்கு கோட்டே விகாராதிபதி அமரர் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் சிவில் சமூக அமைப்புகள் தொழிற்சங்கங்கள் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து செயற்பட்டன. மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடி அதிகரித்துக் காணப்படுவது குறித்தும் இதிலிருந்து நாட்டை மீட்டுக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அப்போது இவர்கள் மேடைகளில் முழக்கமிட்டனர்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். மஹிந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. விசாரணைகள் ஆரம்பமாகின. பலர் மீது விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற பின்னர் 26 கோவைகள் வழக்கு தொடருவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால் இதுவரை ஒரு வழக்காவது தொடரப்படவில்லை.
நல்லாட்சிக்கான அமைப்பு இந்த விடயம் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இருந்தும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததையிட்டு அந்த அமைப்பு அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைக்காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பதவிகளை வழங்கி அழகு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மஹிந்த ஆட்சியில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராகவிருந்தவர் அனுஷ பெல்பிட்ட. பணிப்பாளர் சபையில் பதவி வழி உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதியின் லலித் வீரதுங்க இருந்தார். இந்த இருவரும் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிக்காக தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாவுக்கு இப்புடவைகளை கொள்வனவு செய்தது தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இருந்தும் அனுஷ பெல்பிட்டவுக்கு நல்லாட்சி அரசாங்கம் அமைச்சொன்றில் மேலதிக செயலாளர் பதவி வழங்கியுள்ளது. இப்போது இவ்விடயம் தொடர்பாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஷிராந்தியின் ஹோட்டல் கட்டணம் செலுத்துவது யார்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷ 2014 ஆம் ஆண்டு வெசாக் கொண்டாட்டங்களைக் கண்டு களிப்பதற்காக பிரான்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது இவர் பிரான்ஸிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு கட்டணமாக 2573746 ரூபா அறவிடப்படுகின்றது.
ஷிராந்தி ராஜபக் ஷவுடன் சென்றவர்களும் இந்த ஹோட்டலில் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அளவிலான அறைகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினர் தங்கிய ஹோட்டல் கட்டணத்தை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்திலேயே ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினரின் ஹோட்டல் கட்டணங்களை செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாதாரண வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்துள்ளார். இவர் பிரத்தியேக விமானத்தில் செல்லாததன் காரணமாக இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதன் காரணமாக பெருந்தொகைப்பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்,
நன்றி வீரகேசரி
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்டத்துக்கு அப்பால் மற்றுமொரு மினி வரவு --செலவுத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக்கொண்டு சமர்ப்பிக்கச் செய்தமை மேலும் பெறுமதி சேர் வரியை அதிகரித்தது போன்ற விடயங்களுக்காக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
நல்லாட்சி அரசின் அமைச்சரொருவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராகவே முதல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர். ஆனால் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அப்பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுக்கவில்லை. அதனால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என்பது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்தை விமர்சிக்க அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை பெறுகின்றனர். அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வரும் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆளும் தரப்பைச்சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயமாக பாராளுமன்றத்துக்கு வருகை தரவேண்டுமென்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்ப வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான பணிப்புரை விடுத்துள்ளார். 8 ஆம் திகதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மே தினத்தின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்திருந்த கிருலப்பனை கூட்டம் பிசுபிசுத்துப் போனதையடுத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சோர்வடைந்து போயிருந்தனர். அந்த சோர்வைப்போக்கி மீண்டும் கட்சியினருக்கு உத்வேகத்தை ஏற்படுத்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உதவுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நம்புகின்றனர்.
சச்சின்வாஸ் --- மஹிந்த ரகசிய சந்திப்பு
பல்வேறு மோசடிக்குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட மஹிந்த ராஜபக் ஷவின் நெருங்கிய உறவான சச்சின்வாஸ் குணவர்தன திடீரென மைத்திரி தரப்புக்கு தாவினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலப்பிட்டிய தொகுதி அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் மோசடிகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் சச்சின்வாஸ் குணவர்தனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பை யொஹான் ரத்வத்த ஏற்பாடு செய்ததாகவும் அவரது வீட்டிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் பின்னணியில் ஏதாவது சூழ்ச்சி இருக்கலாமெனவும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
கடந்த மஹிந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 32 வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இருந்தும் சச்சின் வாஸ் குணவர்தன மைத்திரி தரப்புக்கு மாறி அரசு தரப்பு சாட்சியாக மாறிய பின்னர் அவர் மீதான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஊழல் மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அதிருப்தி
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவிக்கு கொண்டு வருவதற்கு கோட்டே விகாராதிபதி அமரர் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் சிவில் சமூக அமைப்புகள் தொழிற்சங்கங்கள் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து செயற்பட்டன. மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடி அதிகரித்துக் காணப்படுவது குறித்தும் இதிலிருந்து நாட்டை மீட்டுக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அப்போது இவர்கள் மேடைகளில் முழக்கமிட்டனர்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். மஹிந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. விசாரணைகள் ஆரம்பமாகின. பலர் மீது விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற பின்னர் 26 கோவைகள் வழக்கு தொடருவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால் இதுவரை ஒரு வழக்காவது தொடரப்படவில்லை.
நல்லாட்சிக்கான அமைப்பு இந்த விடயம் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இருந்தும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததையிட்டு அந்த அமைப்பு அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைக்காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பதவிகளை வழங்கி அழகு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மஹிந்த ஆட்சியில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளராகவிருந்தவர் அனுஷ பெல்பிட்ட. பணிப்பாளர் சபையில் பதவி வழி உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதியின் லலித் வீரதுங்க இருந்தார். இந்த இருவரும் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிக்காக தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாவுக்கு இப்புடவைகளை கொள்வனவு செய்தது தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இருந்தும் அனுஷ பெல்பிட்டவுக்கு நல்லாட்சி அரசாங்கம் அமைச்சொன்றில் மேலதிக செயலாளர் பதவி வழங்கியுள்ளது. இப்போது இவ்விடயம் தொடர்பாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஷிராந்தியின் ஹோட்டல் கட்டணம் செலுத்துவது யார்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷ 2014 ஆம் ஆண்டு வெசாக் கொண்டாட்டங்களைக் கண்டு களிப்பதற்காக பிரான்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது இவர் பிரான்ஸிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்றில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு கட்டணமாக 2573746 ரூபா அறவிடப்படுகின்றது.
ஷிராந்தி ராஜபக் ஷவுடன் சென்றவர்களும் இந்த ஹோட்டலில் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அளவிலான அறைகளை பயன்படுத்தியுள்ளனர்.
ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினர் தங்கிய ஹோட்டல் கட்டணத்தை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்திலேயே ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினரின் ஹோட்டல் கட்டணங்களை செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாதாரண வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்துள்ளார். இவர் பிரத்தியேக விமானத்தில் செல்லாததன் காரணமாக இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதன் காரணமாக பெருந்தொகைப்பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்,
நன்றி வீரகேசரி
Related Pots
மனித உரிமைகள் பேரவையின், 32 ஆவது கூட்டத்தொடர், வரும் 13ஆம் திகதி ஆரம்பித்து, அடுத்தமாதம் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் போகிறது என்றால், அரசாங்கத்துக்கு அது ஒரு கிலியான விடயமாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், கடந்த செப்ரெம்பரில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்குப் பின்னரும், ஜெனீவா கூட்டத்தொடர் என்பது அரசாங்கத்துக்கு அச்சமில்லாத ஒரு விடயமாக மாறிவிட்டது.
அதுபோலவே தமிழ் மக்களுக்கும் இந்தக் கூட்டத்தொடர் மீதான ஆர்வமும் குறைந்து போயிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்ட நெருக்கடியை இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு இருப்பதாக, கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கூறியிருந்தார். அமைச்சர்கள் மஹிந்த அமரவீர, ரவி கருணாநாயக்க ஆகியோருடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், இப்போது போர்க்குற்ற விசாரணை பற்றிய பேச்சுக்களே இல்லை என்றும், யாரையும், மின்சாரக் கதிரையில் ஏற்றும் தேவையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். பொறுப்புக்கூறல் விவகாரம் என்பது இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது என்பதையே அமைச்சர்களின் அந்தக் கருத்து வெளிப்படுத்தியது. முன்னரெல்லாம் ஜெனீவா விவகாரம் குறித்து அமைச்சர்கள் அதிகளவில் வாய்ச்சவடால்களை விடுவதற்கு தயங்குவார்கள். ஏனென்றால், ஜெனீவாவில் எங்கிருந்து பூதம் கிளம்பும் என்று தெரியாத நிலை இருக்கும். அதற்காக, அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட பெரிய பட்டாளத்தையே மஹிந்த ராஜப க் ஷ ஜெனீவாவுக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
ஒரு முறை 72 பேர் கொண்ட அரச குழுவொன்று கூட ஜெனீவாவுக்குச் சென்றது. அந்தளவுக்கு அரசாங்கத்துக்கு சர்வதேச அழுத்தங்கள் காணப்பட்டன.
ஆனால், இப்போதைய அரசாங்கம், ஜெனீவாவைத் திருப்திப்படுத்தும் விடயத்தில் பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும், ஜெனீவா குறித்து அலட்சியமான, நிலையில் தான் இருக்கிறது.ஜெனீவா நெருக்கடியை வென்று விடலாம் என்ற நம்பிக்கையை அமைச்சர்கள் இலகுவாக வெளிப்படுத்துகிறார்கள். இது, மனித உரிமை விவகாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட நம்பிக்கையல்ல.
அதற்கும் அப்பால், இலங்கைக்கும், மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் நெருக்கத்தினால் ஏற்பட்டுள்ள நம்பிக்கை என்றே குறிப்பிடலாம்.
குறிப்பாக அமெரிக்காவுடன் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கமான உறவு, ஜெனீவா நெருக்கடிகளில் இருந்து பெருமளவில் விடுபடுவதற்கு அரசாங்கத்துக்குக் கைகொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு கிடைக்காதளவுக்கு காலஅவகாசங்கள் கொடுக்கப்படுகின்றன. அதிகளவு அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதில்லை. இலகுவாகச் சொல்வதானால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இப்போது இலங்கை விடயத்தில் உச்சக்கட்ட பொறுமையைக் கடைப்பிடிக்கிறது.
இதெல்லாவற்றையும் சாத்தியமாக்கியது, ஆட்சி மாற்றம் தான். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் விட்டாலும் கூட, அச்சமின்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்ட அரங்கிற்குள் துணிச்சலோடு பிரவேசிக்கும் நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த மூன்று மாதங்களில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான அடுத்த தீர்மானத்தைக் கொண்டு வரவிருந்தது அமெரிக்கா.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் ஆறுமாத காலஅவகாசம் கேட்டது, ஆனால் அந்த ஆறு மாதங்களுக்குள் எதையும் செய்யாமலேயே, 2015 செப்ரெம்பர் அமர்வுக்குச் சென்றது இலங்கை அரசாங்கம். அங்கு இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு இலங்கையும் இணங்கி, இணை அனுசரணை வழங்கியது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்று உருவாக்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எட்டு மாதங்கள் கழிந்து விட்ட நிலையில், மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடப் போகிறது. ஆனால் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை. அதனை அமைப்பதற்கான எந்தவொரு பணியையும் முன்னெடுக்கவில்லை.
பொறுப்புக்கூறல் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், பொறுப்புக்கூறல் சார்ந்து அரசாங்கத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறப்போகிறார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், காணாமற்போனோர் பிரச்சினையைக் கையாளுவதற்கான செயலகம் ஒன்றை அமைக்க கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலகத்தை அமைப்பதற்கு, எட்டு மாதங்கள் பிடித்திருக்கின்றன என்றால், காணாமற்போனவர்கள் தொடர்பாக இந்தச் செயலகம் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? என்ற கேள்வி தான் எழுகிறது.
பொறுப்புக்கூறல் என்பது தனியே காணாமற்போனோர் விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் இன்னமும் கூட தேடவில்லை.
அதேவேளை, மீறல்கள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருப்பதாக, அண்மையில் முப்படை அதிகாரிகளிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருக்கிறார்.
இதன் மூலம், ஜெனீவாவில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்மானம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, அரசாங்கம் ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றுகின்ற எண்ணத்தில் இல்லை என்பது இந்த விவகாரத்தின் மூலம் வெளிப்படுகிறது.
அதைவிட, குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக உண்மைகளை ஒப்புக்கொள்ள வைக்கும் ஒரு பொறிமுறையை தான் தேர்வு செய்துள்ளது. இது தென்னாபிரிக்காவில் கையாளப்பட்டது.
அந்தப் பொறிமுறையின் ஊடாக, குற்றமிழைத்த படையினரை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்கவே முயற்சிக்கிறது அரசாங்கம். அரசபடைகளினதும், சிங்கள மக்களினதும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்வதை தவிர்ப்பதற்காகவே, அரசாங்கம் இந்த முறையில் அணுகுகின்றது.
இந்தக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களின் உணர்வுகளையோ எதிர்பார்ப்புகளையோ அரசாங்கம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சமூகத்துக்கும் அதுபற்றிய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
பொறுப்புக்கூறல் சார்ந்த எந்த ஒரு உருப்படியான செயற்றிட்டத்தையும், இன்னமும் நடைமுறைப்படுத்தாத நிலையில் தான், துணிச்சலோடு அடுத்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது அரசாங்கம்.
இதனால் தான், இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் பற்றிய ஆர்வம் தமிழ் மக்களிடம் குறைந்து போயிருக்கிறது. அதுமட்டுமன்றி, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கைகளும் தளர்ந்து போகத் தொடங்கியுள்ளதையே இது உறுதிப்படுத்துகிறது.
நன்றி வீரகேசரி
Related Pots
கச்சத்தீவை மீட்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்று, தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அவர் அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைப் பெற்றுள்ள திமுக, பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. அவரை பேரவை திமுக கட்சித் தலைவராக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் தேர்வு செய்தனர்.
பேரவையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியாக திமுக விளங்குவதால், அந்தக் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை பேரவைத் தலைவர் பி.தனபால் அங்கீகாரம் செய்துள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சனிக்கிழமை அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு அடுத்த நிலையில் வருகிறார். அரசு கொறடாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ அந்தச் சலுகைகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அளிக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.
காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அவர் அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைப் பெற்றுள்ள திமுக, பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. அவரை பேரவை திமுக கட்சித் தலைவராக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் தேர்வு செய்தனர்.
பேரவையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியாக திமுக விளங்குவதால், அந்தக் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை பேரவைத் தலைவர் பி.தனபால் அங்கீகாரம் செய்துள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சனிக்கிழமை அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு அடுத்த நிலையில் வருகிறார். அரசு கொறடாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ அந்தச் சலுகைகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அளிக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.
Related Pots
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 150 கோடி டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ஐ.எம்.எப். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சூழ்நிலைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இதனை எடுத்துக் காட்டும் வகையில், கடந்த ஆண்டில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 131லிருந்து 147-ஆக வீழ்ச்சி கண்டது.
இதனை தடுப்பதற்காக அந்நாட்டின் மத்திய வங்கி ரூ. 20,000 கோடியை செலவிட்டது. இதனால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2015-இல் வெகுவாக வீழ்ச்சி கண்டது. இது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நிதியம், இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வர உதவிடும் வகையில் 150 கோடி டாலர் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 16.8 கோடி டாலர் மதிப்பிலான கடனுதவி உடனடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காலாண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆறு கட்டங்களாக வழங்கப்படும்.
இதுகுறித்து ஐ.எம்.எப். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சூழ்நிலைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இதனை எடுத்துக் காட்டும் வகையில், கடந்த ஆண்டில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 131லிருந்து 147-ஆக வீழ்ச்சி கண்டது.
இதனை தடுப்பதற்காக அந்நாட்டின் மத்திய வங்கி ரூ. 20,000 கோடியை செலவிட்டது. இதனால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2015-இல் வெகுவாக வீழ்ச்சி கண்டது. இது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நிதியம், இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வர உதவிடும் வகையில் 150 கோடி டாலர் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 16.8 கோடி டாலர் மதிப்பிலான கடனுதவி உடனடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காலாண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆறு கட்டங்களாக வழங்கப்படும்.
Related Pots
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு மாணவரும் வகுப்பேற்றப்படுவார்கள் என நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வலிமையான நாடாக கருதப்படும் அமெரிக்காவின் கல்வி கட்டமைப்பில் எந்தவொரு பரீட்சையும் இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறான கட்டமைப்பை நாமும் அமுல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு மாணவரும் வகுப்பேற்றப்படுவார்கள் என நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வலிமையான நாடாக கருதப்படும் அமெரிக்காவின் கல்வி கட்டமைப்பில் எந்தவொரு பரீட்சையும் இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறான கட்டமைப்பை நாமும் அமுல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

























